சம்பந்தருக்கும் கோபம் வந்தது?


விடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூருவது அடிப்படை உரிமையாகும். அதனை யாரும் தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அதேநேரம், உரிமைகள் மறுக்கப்படும் சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்து பலமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சேனாதிராஜாவின் செயற்பாடு பாராட்டப்பட வேண்டியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் 33வது ஆண்டு நினைவுகூரலுக்கு வடக்கு கிழக்கில் நீதிமன்றங்களின் ஊடாக தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments