யாழில் இதுவரை 25 விழுக்காடு



யாழ்ப்பாணம் மாவட்டம். காலை 10 மணி வரையில் 25.1 சதவீதம் வாக்குப் பதிவு.
யாழ்ப்பாண மாவட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் கி.அமல்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.



இதனிடயே தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு இம்முறை வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட மாட்டது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை நிறைவு செய்த குழுவினர் 4 மணிக்கு பின்னர் தங்களுடைய தனிப்பட்ட போக்குவரத்து முறையை பயன்படுத்தி வாக்களிக்க வர முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் பேனா ஒன்று எடுத்து வர வேண்டும் எனவும் அவ்வாறு எடுத்து வராதவர்களுக்கு கிருமி தொற்று நீக்கப்பட்ட பேனா வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை தேர்தலில் 40 அரசியல் கட்சிகள் மற்றும் 352 சுயேட்சை குழுக்கள் சார்ப்பில் 7,452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மேலும் இம்முறை பொது தேர்தலில் வாக்களிக்க 1 கோடி 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவர்கள் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள 12,985 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்வுள்ளனர்.
இம்முறை அதிகளவான வேட்பாளர்கள் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன் அடிப்படையில் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் 1,785,964 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 1,709,209 பேரும், குருணாகல் மாவட்டத்தில் 1,348,787 பேரும், கண்டி மாவட்டத்தில் 1,129,100 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் மாலை வாக்களிப்புக்கள் நிறைவடைந்ததும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு அல்லது 8 மணிக்கு ஆரம்பமாவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் 2,773 நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொடுப்பனவை செலுத்தி, பதிவு செய்து கொண்டுள்ள இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரமே 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவிப்பதற்கான அனுமதியை தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
அத்துடன் தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்காக 69,000 பொலிஸார் மற்றும் 10,500 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அந்தந்த மாவட்டங்களிலிருந்து 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 19 பேர், கம்பஹா மாவட்டத்தில் 18, களுத்துறை மாவட்டத்தில் 10, கண்டி மாவட்டத்தில் 12, மாத்தளை மாவட்டத்தில் 05, நுவரெலியா மாவட்டத்தில் 08, காலி மாவட்டத்தில் 09, மாத்தறை மாவட்டத்தில் 07, ஹம்பாந்தோட்டை மாவட்ட த்தில் 07, யாழ். மாவட்டத்தில் 07, வன்னி மாவட்டத்தில் 06, மட்டக்களப்பு மாவட்டத்தில் 05, திகாமடுல்ல மாவட்டத்தில் 07, திருகோணமலை மாவட்டத்தில் 04, குருநாகல் மாவட்டத்தில் 15, புத்தளம் மாவட்டத்தில் 08, அனுராதபுரம் மாவட்டத்தில் 09, பொலன்னறுவை மாவட்டத்தில் 05, பதுளை மாவட்டத்தில் 09, மொனராகலை மாவட்டத்தில் 06, இரத்தினபுரியில் 11, கேகாலை மாவட்டத்தில் 09 என 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

No comments