ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி


வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என்ற ஊகம் செய்தி ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளிவந்த நிலையில் அவர் கட்சிக் கூட்டத்தில் தோன்றி ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ‘பவி’ சூறாவளி ஆகிய இரண்டையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு கிம் ஜாங்-உன் வட கொரிய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அரசு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஒரு சூறாவளியால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களுக்கு தயார் நிலையில் இருக்குமாறு  கிம் ஜாங்-உன் வட கொரிய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவை எதிர்கொள்ளும் வட கொரியாவின் நடவடிக்கையில் குறைபாடு இருப்பதாக அந்நாட்டு கிம் ஜாங் உன் ஒப்புக்கொண்டுள்ளார்.

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் தீவிர மன அழுத்தம் காரணமாக தன்னுடைய பொறுப்புகள் சிலவற்றை சகோதரியிடம் ஒப்படைத்துள்ளதாக செய்தி வெளியானது.

அதைத் தொடர்ந்து தென் கொரியாவின் மறைந்த ஜனாதிபதி கிம் டே ஜாங்  முன்னாள் உதவியாளரான ஜாங் சாங் மின் வடகொரியா ஜனாதிபதியான கிம் ஜாங் உன் கோமா நிலையில் இருக்கிறார். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறாரா என்பது குறித்து உறுதியாக கூற முடியவில்லை என்று கூறினார்.

இதையடுத்து தற்போது அவர் இறந்திருக்கலாம் என்ற ஊகங்கள் மீண்டும் எழுந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு இப்படி தான் பொது வெளியில் கிம் ஜாங் உன் தென்படாததால், அவர் இறந்துவிட்டார் என்று செய்தி வெளியாகியிருந்தன.

No comments