ரஷ்யாவின் 2வது கொரோனா தடுப்பூசி சோதனைகள் ஆரம்பம்!


ரஷ்யா உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது. இந்நிலையில், இரண்டாவதாக ஒரு தடுப்​பூசிக்கு செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் ஒப்புதல் அளிக்க உள்ளதாக அந்நாட்டின் துணை பிரதமர் டாடியானா கோலிகோவா தெரிவித்துள்ளார். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அதிபர் விளாதிமீர் புதினிடம்  இதனை அவர் தெரிவித்தார். 

சைபீரியாவின் வெக்டர் வைராலஜி நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசியின் ஆரம்பக் கட்ட சோதனைகள் செப்டம்பர் இறுதிக்குள் முடிவடையும் எனவும் டாடியானா கோலிகோவா தெரிவித்துள்ளார். முதல் இரண்டு கட்ட சோதனையில் எந்தவித எதிர்மறை விளைவுகளும் வெளிப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 

No comments