மூடப்பட்டது முன்னணி அலுவலகம்! விரட்டப்பட்ட மணி மற்றும் ஆதரவாளரகள்!

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்திற்கு ஊடக சந்திப்பு நடத்த சென்ற மணிவண்ணன் மற்றும் ஆதரவாளர்கள் வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்து பதவி விலக்கப்பட்ட மணிவண்ணன் தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் இன்று (21) கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்ள மணிவண்ணனின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்துக்கு சென்ற போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மணிவண்ணனின் ஆதரவாளர்களை வெளியேற்றியதுடன் கட்சி அலுவலகத்தை மூடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments