கிளிநொச்சிக்கு வந்தது?


கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமைபுரியும் கம்பஹாவைச் சேர்ந்த இராணுவ சிப்பாய்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இவரது சகோதரி கல்விபயிலும் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில் நுட்ப பீட வளாகத்தின் அனைத்து பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டுள்ளது.


மாணவிக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும் இன்று திங்கட்கிழமை (ஜூலை 13) மாலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் கம்பஹாவில் உள்ள சுகாதாரத் திணைக்களத்திலிருந்து கிளிநொச்சி பிராந்திய சுகாதாரத் திணைக்களத்துக்கு உத்தியோக பூர்வமாகத் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.

No comments