நேருக்கு நேர் மோதியது பேருந்து மற்றும் சிற்றூர்த்தி!

அம்பாறை கல்முனை மருதமுனைப் பகுதியில் பேருந்து ஒன்றும் சிற்றூர்த்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மருதமுனை பிரதான வீதியில் இடம்பெற்றிருந்தது.

தனியார் பேருந்து ஒன்றும் சிற்றூர்தியும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் சிற்றூர்த்தியில் பயணித்த நால்வருமே படுகாமடைந்துள்ளனர். அத்துடன் சிற்றூர்த்தி முற்று முழுதாக சேதமடைந்துள்ளது.

படுகாயமடைந்துள்ள நால்வரும் கல்முனை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து சிறிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இருப்பினும் பேருந்தின் ஒட்டுநர் காவல்துறை நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

No comments