யாழில் உள்ளுர் தொலைக்காட்சிகளிற்கு தடை?


யாழ்ப்பாணத்தில்; தேர்தலை முன்னிறுத்தி கல்லாகட்டிவரும் உள்ளுர் கேபிள் தொலைக்காட்சிகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் கவனம் சென்றுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 5ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் உள்ளூர் ஊடகங்கள் , உள்ளுர்த் தொலைக் காட்சிகளான கேபிள் இணைப்புக்களில் 3ம் , 4ம் திகதிகளில் விளம்பரங்கள் தேர்தல் கருத்துக்கள் பரப்ப முடியுமா என  தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

ஒருபுறம் அங்கயனிற்கு ஆதரவாக ஒர் தொலைக்காட்சியும் இன்னொரு புறம் ஈபிடிபி,கூட்டமைப்பிற்கென தொலைக்காட்சிகள் மும்முரமாக பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில் இவ்விடயம் தற்போது சூடுபிடித்துள்ளது.

இதன்போது ஆணைக்குழுவின் தவிசாளர் எந்த வகையான ஊடகமும் எந்த விளம்பரமோ அல்லது ஊக்களிக்கவோ முடியாது என்பதே சட்டமாகும் என தெரிவித்துள்ளார்.

No comments