முடிவுக்கு வந்தது தொழிற்சங்க போராட்டம்?


கடந்த 11 நாட்களாக முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையை இன்று (29) முடிவுக்கு கொண்டுவருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 7.30 மணி முதல் வழமை போன்று கடமைக்கு சமூகமளிப்பதற்கு  தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சருடன் நேற்று (28) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

No comments