யாழில் சுவரொட்டிகளுடன் கைது வேட்டை!


தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் இரண்டு பேர், வட்டுக்கோட்டையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான ஈஸ்வரபாதம் சரவணபவனின் சுவரொட்டிகளுடனே இருவரும் நேற்று (05) இரவு கைது செய்யப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸார் கூறினர்.

முன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதவாளர் ஒருவரும் துண்டுபிரசுரம் வைத்திருந்த நிலையில் கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments