முகமட் கொழும்பிற்காக திருப்பி அழைப்பு?


கூட்டமைப்பினை கவனிக்கவென யாழ். மாவட்டத்திற்கென அனுப்பி வைக்கப்பட்ட முகமட் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட விசேட அதிகாரி தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் எழுப்பிய சந்தேகம் காரணமாக குறித்த அதிகாரி திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரும் சுமந்திரனின் சிபார்சில் அப்பதவியை பெற்றவருமான ஒருவரது அழுத்தங்காரணமாக  ஆணைக்குழு முன்னாள் உதவித் தேர்தல் ஆணையாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற முகமட்டை  யாழ்ப்பாணத்திற்கென விசேடமாக நியமித்து யாழ்ப்பாணம் அனுப்பியது.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனது கட்சி சார்பில் போட்டியிடும் ஓர் வேட்பாளரும் விக்னேஸ்வரனும் விசேடமாக நியமிக்கப்பட்ட அதிகாரி தொடர்பில் பகிரங்கமாக சந்தேகம் எழுப்பியதோடு பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தன.

குறித்த அதிகாரியே 2015ம் ஆண்டைய தேர்தலில் விருப்பு வாக்கு மோசடிகளை செய்து சுமந்திரன் உள்ளிட்டவர்களை வெல்ல வைத்தமை தொடர்பான சர்ச்சைகளில் அகப்பட்டிருந்தார்.

குற்றச்சாட்டுக்களையடுத்து நேற்றைய தினம் குறித்த அதிகாரி மீண்டும் கொழும்பு திருப்பபட்டுள்ளார்.

No comments