வடகிழக்கை கோரமுடியாது:மகிந்த


வடகிழக்கிற்கு தமிழர் தாயகத்திற்கு தமிழர் உரிமை கோர முடியாதென மகிந்த கருத்து வெளியிட்டுள்ளார். 
இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு. ஒரு மாகாணத்தை ஒரு தரப்பினர் மாத்திரம் உரிமை கொண்டாடுவது தவறானதாகும். தெற்கில் பிறந்தவருக்கும், வடக்கில் பிறந்தவருக்கும் சமவுரிமை உண்டு. ஓர் இனத்துக்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்கி தேசியத்தை கட்டியெழுப்புவது எமது நோக்கமல்ல எனவும்  மஹிந்த தெரிவித்துள்ளார்.
மதம், மற்றும் மதத் தலைவர்களை அவமதிக்கும் வித்தில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதை அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கர்தினால் ஆண்டகை தொடர்பில் எதிர்த்தரப்பினர் குறிப்பிட்டுள்ள கருத்து கவலைக்குரியது.
மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை அரசியல்வாதிகளுக்கு சார்பாக செயற்படவில்லை என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments