தனக்குத்தானே தீ மூட்டி தாய் பலி! கிளிநொச்சியில் சம்பவம்!

கணவனின் வதை தாங்காமல் இரண்டு பிள்ளைகளின் தாய் தன்னைத் தானே தீ மூட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கிளிநொச்சி ஜெயபுரம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே என தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் வசித்து வரும் குடும்பப் பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் அண்மைக்காலமாக முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த 5 ஆம் திகதி குறித்த குடும்பப் பெண் கணவனின் சித்திரவதையை தாங்காது தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டி தற்கொலைக்கு முயற்சித்துள்ளளார்.

தீக்காயத்திற்குள்ளான அவரை உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேலதிக சிகிசசைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். 

No comments