தபால் வாக்குகள் அனுப்பிவைக்கப்பட்டது?


பொது தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குச்சீட்டுக்கள் இன்று முதல் விநியோகிக்கப்பட்டுவருகின்றது.

இதற்கமைய இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களிலும் அஞ்சல் மூல வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய ஆவணங்கள் நாடளாவிய ரீதியில் உள்ள தெரிவத்தாட்சி அலுவலங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இந்த முறை தேர்தல் குறித்த அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 7 லட்சத்து 5 ஆயிரத்து 85 பேர் தகுதிப் பெற்றுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் மட்டும் 23ஆயிரம் பேர் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளனர். 

இதற்கமைய அடுத்த மாதம் 14,15,16,17 மற்றும் 20,21 ஆம் ஆகிய திகதிகளில் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

No comments