இன்று 33பேர் பலி, புதிதாக 2,865 பேருக்கு தொற்று! தமிழகத்தை வாட்டி வதைக்கும் கொரோனா!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துஉள்ளது.  இதுவரை இல்லாத அளவில் உச்சபட்சமாக  இன்று 2,865 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  67,468 ஆக அதிகரித்துள்ளது.

அதே வேளையில், இன்று  உச்சபட்சமாக  ஒரேநாளில்  முதன் முறையாக ஒரே நாளில் 2424 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
இன்று 33 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 866 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 2424 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  45,814 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 28,836 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு உள்ளது. அவர்களில் 2744 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்பது தெரிய வந்துள்ளது.

இன்று தமிழகத்தில் 2,744 பேரும், வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments