வீதியில் சென்றவர் தீடீரென் மரணம்!

திருகோணமலை, கடல்முக வீதி மற்றும் மத்திய வீதி சந்தியில் இன்று காலை 11.00 மணியளவில் வீதியில் நடந்து சென்றவர் திடீரென வீதியில் விழுந்து
உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் திருகோணமலை நிலாவெளி வீதி கேணியடி பிரதேசத்தைச் சேர்ந்த தங்கதுரை (வயது 68) என தெரியவந்துள்ளது.

சடலத்தை நோயாளர் காவு வாகனம் முலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றனர்.

சடலம் தற்போது திருகோணமலை பொதுவைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணையை துறைமுகப் காவல்துறையினர் மேற்கொள்கின்றனர்.

No comments