தேசப்பற்றாளனுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்

தேசியத் தலைவரையும், தாயகத்தையும், மக்களையும் நேசித்து தமிழர்களின் விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்காக 19 வருடங்கள் உழைத்த தேசப்பற்றாளரான சுரேஷ் தம்பிராஜாவை நாம் இன்று இழந்து விட்டோம்.



கனடாவில் ஒட்டோவாவில் தமிழ் மக்களை ஒருங்கிணைத்து தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவை திரட்டியமை, தாயகத்தின் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக வளர்ச்சிக்கான பங்களிப்பை வழங்கியமை என அவரின் தாயகம் நோக்கிய செயற்பாடுகளை வெளிப்படையாகக் கூறியும் கூறாமலும் வரிசைப்படுத்தலாம்.

எதிர்வரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் வணக்கம் செலுத்த அவரது உடல் வைக்கப்படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இறுதி வணக்க நிகழ்வகள் நடைபெறவுள்ளது.

வெள்ளி
காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை
குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்

மதியம் 12 மணி முதல் 3 மணி வரை
ஒட்டாவா நண்பர்கள்

சனிக்கிழமை

காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை
குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்

காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை
டொராண்டோ / மாண்ட்ரீல் நண்பர்கள்

ஞாயிற்றுக்கிழமை

காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை:
குடும்பம் மற்றும் உறவினர்கள்

காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
டொராண்டோ / மாண்ட்ரீல் / ஒட்டாவா நண்பர்கள்

பிற்பகல் 2 - 3 மணி வரை
குடும்பத்தினர் மட்டும்

இதேநேரம் வணக்க நிகழ்வுகள் காணொளியிலும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய கொரோனா நெருக்கடி நிலைமையக் கருத்திற்கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு கேட்கப்பட்டுள்ளன. இதேநேரம் சுரேஷ் அவர்களின் உடலைப் பார்வையிடவும் வணக்கம் செலுத்தவும் நான்கு பேர் நான்கு பேராக அனுமதிக்கப்படுவார்கள்.

முகவரி:

Capital Funeral Home & Cemetery
3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada








No comments