ஐநா விதிமுறைகளையும், சர்வதேச சட்டங்களையும் அமெரிக்க மீறியுள்ளது; ஐநாவுக்கு ஈரான் கடிதம்!

அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக விலகிய விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ஐ.நா.வுக்கு ஈரான் அரசு கடிதம் அனுப்பி உள்ளது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது .

அணு ஆயுதங்களை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளுடன்  பிற
நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தா வண்ணம் இருக்க  அந்த நாடுகளுடன் ஒப்பந்தம் போடுவது வழக்கம் அதுபோல ஈரானுடன் அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி இருந்தன

‘அணுசக்தி ஒப்பந்தம்’ என்று அழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, ஈரான் தனது அணு ஆயுத கையிருப்பை படிப்படியாக குறைக்க வேண்டும். அதற்கு பிரதி பலனாக, அந்த நாட்டின் மீது விதித்த பொருளாதார தடைகளை மேற்கூறிய வல்லரசு நாடுகள் திரும்பப்பெற வேண்டும்.

ஈரானுடனான இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் திடீரென அறிவித்தார். மேலும் ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தார். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் நீடித்து வருகிறது.அமெரிக்கா எந்த நேரத்தில் எதை செய்யும் என்பது தெரியாததால் மற்ற நாடுகள் அமைதி காத்து வந்தது .

இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசுக்கு, ஈரான் வெளியுறவு மந்திரி முகமது ஜாவத் ஷாரீப் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில், “அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது, ஐ.நா.வின் விதிமுறைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறும் செயல் ஆகும். அதன் விளைவுகளுக்கு ஐ.நா. சபை அமெரிக்காவை உடனடியாக பொறுப்பேற்க வைக்க வேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.
அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக விலகியது இப்போது ஐநா வரை போயிருப்பது கவனிக்கத்தக்கது. ஐநாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள உறவு சரியில்லாத நிலையில் இந்த விஷயத்தை ஐநா எப்படி கையாளப்போகிறது?

No comments