பங்கர் வெட்டி கசிப்பு:யாழில் முன்னேற்றம்


வீட்டுக்குள் சுரங்கம் வெட்டி கசிப்பு காய்ச்சி மறைத்து வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் இன்று கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஊரெழு பகுதியில் கசிப்பு காயச்சப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மிகவும் நூதனமான முறையில் சுரங்கம் வெட்டப்பட்டு அதற்குள் கசிப்பு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் சுரங்கத்திலிருந்து 12 போத்தல் கசிப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை கோப்பாய் ராச வீதிப் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து 6 போத்தல் கசிப்பு 29 போத்தல் கோடாவம் மீட்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 54 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக கோப்பாய் பொலிஸ் பிரிவில் தொடர்ச்சியாக கசிப்பு தொடர்பான கைதுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments