போதைபொருள் கும்பலுடன் தொடர்பில்லை!


வடமராட்சியின் உடுப்பிட்டியில் கைதாகியிருந்த லக்கி எனப்படும் போதைபொருள் நபருடன் தமது மகன் தொடர்புபட்டிருக்கவில்லையென தற்கொலை செய்து கொண்டுள்ள சாம்பசிவம் ஜீவசங்கரி என்பவரது குடும்பம் அறிவித்துள்ளது.

இன்று குடும்பத்தவர்கள் சார்பில் ஊடகங்களிற்கு வழங்கப்பட்ட தகவலில் சட்டக்கல்லூரி மாணவனான தங்கள் மகன் சாம்பசிவம் ஜீவசங்கரி மனவிரக்தி காரணமாக தானாகவே சுயவிருப்பில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

போதை பொருள் கடத்தலில் கைதான லக்கி என்றழைக்கப்படும் நபருடன் தமது மகன் தொடர்பு அற்றவரெனவும் கைது சம்பவம் வேறு தற்கொலை சம்பவம் வேறு எனவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த செய்திகள் காரணமாக தாங்கள் மனவருத்தமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள குடும்பத்தினர் உண்மையினை வெளிப்படுத்த கோரியுள்ளனர்.

ஏற்கனவே கடத்தப்பட்ட பின்னர் தற்கொலை செய்துள்ள இளைஞன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் முன்னதாக இடம்பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


No comments