சீனாவில் புதிதாக 1200 மரணங்கள்! - எப்படி?

உலகை ஆட்டுவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய சீனாவில் கொரோனா தாக்கி மரணித்தோர் எண்ணிக்கையை அந்நாட்டு அதிகாரிகள் இன்று (17) திருத்தம் செய்து அதிகரித்துள்ளனர்.

இதன்படி வுஹான் நகரின் கொரோனா மரணங்கில் எண்ணிக்கையில் புதிதாக 1,290 பேரை அதிகாரிகள் உள்ளீடு செய்துள்ளனர்.

இதன்படி சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 4,632 ஆக உயர்ந்துள்ளது.

சீனா அரசாங்கம் தமது நாட்டு மக்களின் மரண எண்ணிக்கையை மறைப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில் இந்த எண்ணிக்கை திருத்தம் மேலும் அந்த குற்றச்சாட்டை வலுப்பெறச் செய்துள்ளது.

No comments