சுகாதார பரிசோதகரும்:விமான சேவை கூண்டோடு இரத்து!


இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளும் மே மாதம் 15 ஆம் திகதி  வரை  தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளன. 
கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையிட்டு, பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
விசேட பயணிகள் சேவையும் அத்தியாவசிய சேவையும் மாத்திரம் முன்னெடுக்கப்படுமென, இலங்கை விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
மேலதிக தகவல்களை 940117771979 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதனிடையே பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவரும் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.
இவர் நேற்று (24) இரவு இனங்காணப்பட்ட 416 ஆவது தொற்றாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 
கொரோனா தொற்றினால் 420 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதுடன், 109 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

No comments