பச்சிலைப்பள்ளிக்கு ஆனையிறவில் தடையில்லையாம்?


கிளிநொச்சி மாவட்ட மக்களை ஆனையிறவு ஊடான போக்குவரத்தில் படைத்தரப்பு தடுத்து வருவது தொடர்பில் பேச்சுக்கள் நடந்துள்ளது.எனினும் மக்கள் தமது தேவைகளிற்காக அடையாள அட்டையை காண்பித்து ஆனையிறவு ஊடாக பயணிக்க முடியும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆனையிறவு ஊடான போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள மக்கள் தமது தேவைகளிற்காக அடையாள அட்டையை காண்பித்து பயணிக்க முடியும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

ஊரடங்கு தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் உள்ள மக்கள் மாவட்ட செயலகம் மற்றும் னைய நிர்வாக செயற்பாடுகளிற்கு கிளிநொச்சி  நகரிற்கு வருகை தருவதில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக முறையிடப்பட்டது.

குறித்த விடயம் பலரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து போக்குவரத்து இலகுபடுத்தல் ஒன்று மேற்கொண்டு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே யாழிற்குள் வருபவர்கள் வெளியேறுபவர்கள் ஆனையிறவில் சோதனைகளை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

No comments