ரஷ்யாவில் கொரோனா நெருக்கடியை சாமாளிக்க இராணுவத்தைப் பயன்படுத்த முடிவு!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் நோய்வாய்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால் அந்த நெருக்கடியைச் சமாளிக்க இராணுவத்தைப்
பயன்படுத்தப் போவதாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய இராணுவத்தின் அனைத்து திறன்களும் பயன்படுத்தப்படலாம்,  பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் காணொளிவழியாக அமைச்சர்களிடம் கூறியுள்ளார்.

ரஷ்யாவில் நாளாந்த பதிவில் மிக அதிகமாக ஒரு நாள் மட்டும் 2,558 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது. இதுவரை 18,328 பேருக்கு தொற்று நோய் ஏற்பட்டுள்ளது.

No comments