மட்டுவில் கஞ்சா தோட்டம்; சுற்றிவளைத்த அதிரடிபடை

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி சந்தணமடு காட்டுப் பகுதியில் கஞ்சா தோட்டம் ஒன்றை சுற்றிவளைத்து கஞ்சா செடிகள் மற்றும் கசிப்பு கொள்கலன் என்பவற்றை வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினர் இன்று (05) கைப்பற்றினர்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து எட்டு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதில் சந்தணமடு காட்டுப் பகுதியில் இருந்து பதினாறு கஞ்சா செடிகள் வளர்த்து வந்த நிலையில் கைப்பற்றப்பட்டு உள்ளதுடன், கசிப்பு தயாரிப்பதற்கு ஆரம்ப நடவடிக்கை மேற்கொண்டு பதுக்கி வைக்கப்பட்ட 210 லீற்றல் கசிப்பு கொள்கலன் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஈடுபட்டு வந்த நபர்கள் தப்பி ஓடியுள்ளதுடன், இவர்கள் தொடர்பான விசாரணைகளை இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். (150)

No comments