ஈபிடிபி உறுப்பினர் மீது வீட்டுக்குள் வைத்து வாள் வெட்டு!

யாழ்ப்பாணம் - மறவன்புலவு பகுதியில் இன்று (29) இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் ஈபிடிபியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மறவன்புலவிலுள்ள குறித்த பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுக்குள் இன்றிரவு 7.15 மணியளவில் நுழைந்த மூவர் கொண்ட குழுவினர் சரமாரியாக வாள்வெட்டை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது பிரதேச சபை உறுப்பினர் அரியகுட்டி நிமலறோகனும், அவரது மனைவியும் காயமடைந்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பிரதேச சபை உறுப்பினர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரி பிரதேச சபையில் இன்று (29) இடம்பெற்ற கூட்டத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த உறுப்பினர் உரையாற்றிய பின்னணயிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

No comments