யாழில் மேலும் இருவருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது இன்று (01) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுவிஸ் பாஸ்டருடன் தொடர்புபட்டதால் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10 பேருக்கு மேற்கொண்ட ஆய்வுக்கூட பரிசோதனையில் மேலும் இருவருக்கும் தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

முன்னதாக இன்று மாலை குறித்த மையத்தில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன்படி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 10 பேரில் மூவருக்கும் தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி,

இவர்கள் அனைவரும் ஒரு கிழமைக்கு மேலாக அப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள். இம்மூவரும் குறித்த மத போதகரோடு நேரடியாக தொடர்பு கொண்டவர்கள்.

ஆகவே கொரோனா தொற்று நோயானது எந்தவிதமான அறிகுறிகளும் இன்றி சிலரிடையே காணப்படலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

ஆகவே பொது மக்கள் மிகவும் அவதானமாக சுகாதார அமைச்சினதும் அரசாங்கத்தினதும் அறிவுரைகளை ஏற்று நடந்து கொள்ள வேண்டும் - என வலியுறுத்தினார்.

No comments