மே28 அல்ல:ஜீன் 20 தேர்தல்?


பல தரப்புக்களதும் எதிர்ப்பிற்கும் மத்தியில் ஜீூன் 20 ம் திகதி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் அறிவிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தல் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் முரண்பட்டுள்ள நிலையில் புதிய திகதி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே தேர்தலை ஒத்திவைக்குமாறும் நாடாளுமன்றத்தை கூட்டுமாறும், தேசிய பிக்குகள் முன்னணியும் கோரிக்கை விடுத்துள்ளது.

 முன்னணியின் தலைவர் வண.ஹந்துகல ரத்தணபால, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நேரத்தை விட, தற்போது நாட்டின் நிலை முற்றாக மாறிவிட்டது என்றும் நாடு, ஆபத்தான நிலையில் இருப்பதாக, சுகாதார அதிகாரிகள் எச்சரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடு, கொரோனா வைரஸ் ஆபத்தில் இருக்கும் போது, அது முற்றாக அகற்றப்படாமல், பொதுத் தேர்தல் திகதியை நிர்ணயிப்பது, இந்த ஆபத்தை வேகப்படுத்துகின்றது என்றும் எவ்வாறாயினும், பொதுத் தேவை நடத்தவும் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையிலும் மலிவான அரசியல் இலாபம் தேடுவதற்குமே, அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

எனவே, கொரோனா அச்சுறுத்தில் இருந்து, நாட்டை முற்றாக பாதுகாக்க வேண்டும் நாடாளுமன்றம் இயங்காமல் உள்ளது. தேர்தல்கள் ஆணையகத்தால், தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது, நாட்டில் கடுமையான நெருக்கடியை உண்டாக்குவதோடு, கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றது. எனவே, நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு, கோருவதாகவும் ஹந்துகல ரத்தணபால தேரர் தெரிவித்துள்ளார்.

No comments