நீதியின் குரல் ஒலிக்கும் - விக்கி

"எமது மக்களுக்கான நீதியின் குரல்கள் நாடாளுமன்றத்தில் வெகு விரைவில் ஒலிக்கும் என்று தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் தலைவர் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

கேள்வி -  இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பெருவாரியாக வந்து உங்கள் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகின்றீர்களா? நீங்கள் மக்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்.

பதில் - யார் உண்மையானவர்கள், யார் நேர்மையானவர்கள் என்பது எங்களுடைய மக்களுக்கு நன்கு தெரியும். ஆகவே எமது மக்களுக்கான அவ்வாறான நீதியின் குரல்கள் நாடாளுமன்றத்தில் வெகு விரைவில் ஒலிக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை. அது உலகின் ஆன்மாவைத் தொடும் என்றும் நான் நம்புகின்றேன். நிச்சயம் உலகத்தின் சிந்தனைகள் மாறும். எமது மக்களுக்கான நீதி கிடைக்கும் என்பது என் மக்களுக்கு நான் கூறவிரும்புவது. - என்றார்.

No comments