மட்டுமா சபையில் நிறைவேறிய தீர்மானம்

கொரொனா நோய்த்தொற்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளை தடுத்து வைத்து அவதானிக்கும் வகையிலும் ஆரம்ப சிகிச்சைக்காகவும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அழைத்து வரப்படுவதை தடை செய்யக் கோரும் ஓர் கண்டன தீர்மானமும், மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்குமான தீர்மானமும் மட்டக்களப்பு மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாநகர சபையின் 31 ஆவது சபை அமர்வானது இன்றைய தினம் (13) மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

நிதிக்குழு உள்ளிட்ட குழுக்களின் சிபாரிசுகளுடன் முன்மொழிவுகளும், மாதாந்த வரவு செலவு அறிக்கை தொடர்பான விடயங்களும் மற்றும் மாதாந்த கொடுப்பனவு  உட்பட கொள்வனவு விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

இவ் அமர்வின் விசேட அம்சங்களாக கொரோனா வைரஸ் உலகை ஆக்கிரமித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் சில வெளிநாட்டு நபர்களும் அந்த நோய்தொற்று இருக்கலாம் எனும் சந்தேகத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அழைத்து வரப்படுவதை தடை செய்யக் கோரும் ஓர் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

No comments