ஓய்ந்த பாடில்லை?


மேலும் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 113 ஆக உயர்வு

புத்தளம்- தம்போவ இராணுவ முகாமில் பணியாற்றிவரும் இராணுவ வீரர் ஒருவரும், இந்தோனேசியா சென்று நாடு திரும்பிய நபர் ஒருவரும் கொரோனா அறிகறிகளுடன் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரிடமும் நோய் அறிகுறிகள் இனங்காணப்பட்டதையடுத்து, புத்தளம் வைத்தியசாலையில் இருந்து குருநாகல் வைத்தியசாலைக்கு இன்று (28) மாற்றப்பட்டுள்ளனரென, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றுக்கு இலக்கான அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த நபரின் தந்தை மற்றும் சகோதரி ஆகியோர், நோய் அறிகுறிகள் இனங்காணப்பட்ட நிலையில், களுத்துறை- நாகொடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனரென, பண்டாரகம சுகாதார வைத்திய  அலுவலகம் தெரிவித்துள்ளது.
டுபாயில் 2 நாள்கள் தங்கியிருந்து கடந்த 19 ஆம் திகதி நாடு திரும்பிய நபரே, கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனதுடன், குறித்த நபர் அட்டுலுகம பிரதேசத்தில் பலருடன் தொடர்புகொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிற

No comments