பற்றியெரிந்த தும்புத் தொழிற்சாலை

யாழ்ப்பாணம் - தென்மராட்சி, எழுதுமட்டுவாழ் ஏ-9 வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள தும்புத் தொழிச்சாலை தீப்பற்றி எரிந்ததில் பல இலச்சம் பெறுமதியான தென்னம் பொச்சுக்கள் தீக்கரையாகியுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று (15) மாலை ஏற்பட்டுள்ளது.

தும்புத் தொழிச்சாலைக்கு அருகாமையில் காணப்படும் காட்டிற்கு இனம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. காட்டிற்கு வைக்கப்பட்ட தீப்பரவலானது தும்புத்தொழிச்சாலையின் வெளியில் அடுக்கப்பட்டுள்ள பொச்சுக்கள் மீது பரவியமையால் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. 

குறித்த தீ விபத்தினை இராணுவத்தினர், தென்மராட்சி தீ அணைப்பு படையினர் மற்றும் ஊர் வாசிகள் இணைந்து கட்டுபாட்டிற்கு கொண்டுவந்தனர்.

தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரனையை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments