வவுனியா கொரோனா மையத்துக்கு எதிர்ப்பு

வவுனியா - பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா கண்காணிப்பு தடுப்பு முகாமுக்கு பயணிகள் கொண்டு வரப்பட்டதை கண்டித்து நெளுக்குளத்தில் இன்று (14) கண்டன போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா- தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடைபெற்றது.

‘அகற்று அகற்று கொரோனா முகாமை அகற்று’, ‘கொரோனா வைரஸ் வவுனியாவிற்கு வேண்டாம்’, ‘தமிழர் பிரதேசத்தில் கொரோனா முகாமை எதற்காக அமைத்தாய்’ போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

No comments