கிளிநொச்சியில் ஒருவர் கைது?

கிளிநொச்சி - முரசுமோட்டை, கோரக்கன் கட்டு குடியிருப்புப் பகுதியில் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுப்பட்டு வருகின்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் வெடிப்பு சத்தம் கேட்டதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் தேடுதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த வீட்டினை சோதனை செய்த போதே வெடி பொருட்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments