9 சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக, ஒன்பது சுயாதீனக் குழுக்கள் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளன.
வன்னி, யாழ்ப்பாணம், களுத்துறை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களிலேயே, இந்தச் சுயாதீனக் குழுக்கள், கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளன.
வன்னி தேர்தல் தொகுதிக்காக,
- நாமல் லியனபத்திரணநீல் சாந்த,
- எம்.பி.நடராஜா
ஆகியோர், சுயாதீனக் குழுக்களாகக் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில்,
- மயில்வாகனம் விமல்தாஸ்,
- ஐங்கரநேசன் பொன்னுதுறை,
- விக்டர் அன்டனி வில்லியம்ஸ்
ஆகியோர் தலைமையிலான மூன்று சுயாதீனக் குழுக்கள், கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில்,
- உடவத்தகே மஹிந்த சில்வா
மட்டக்களப்பு மாவட்டத்தில்,
- ரம்ழான் மொஹமட் இம்ரான்,
- அசனார் மொஹமட் அஸ்மி
ஆகியோர், தங்களுடைய சுயாதீனக் குழுக்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
Post a Comment