இதுவரை 5000 பேர் கைது!

நாட்டில் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1,167 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments