தொலைபேசி கடை உடைப்பு; நால்வர் கைது

திருகோணமலை மற்றும் கந்தளாயில் தொலைபேசி கடை உடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை கைக்குண்டு, வாள்களுடன் நேற்று (13) இரவு கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

3 தொலைபேசி கடைகளை உடைத்து தொலைபேசிகள், 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மீள்நிரப்பு அட்டைகள், 2 மடிக் கணணிகள், பற்றரிகள், சாச்சர், 1 இலட்சம் ரூபா பணம் போன்ற பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த நால்வரையும் கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக குற்ற விசாரணை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர்கள் நால்வரையும் தம்பலாகாமம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாகவும், சந்தேக நபர்கள் காத்தான்குடி, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சந்தேக நபர்களிடமிருந்து கைக்குண்டு, வாள்கள், சிறிய கத்தி, மடிக்கணணி 2, பணம், தொலைபேசிகள் மற்றும் பூட்டுகளை உடைக்கும் கருவி போன்றன கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments