எதிர்கட்சி எதிர்ப்பால் பின்வாங்கிய அரசு

அரசாங்கம் இன்று (20) நாடாளுமன்ற சபையில் சமர்ப்பிக்கவிருந்த குறைநிரப்பு பிரேரணையை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த பிரேரணையின் அபிவிருத்திக்கான செவவீனங்களை எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஆதரித்த போதிலும் தவறாக அறிவுறுத்தப்பட்ட வரி குனறப்புடனான செலவீனங்களுக்கு கடும் ஆட்சேபனை வெளியிடப்பட்டது.

இந்நிலையிலேயே 350 பில்லியன் ரூபாவை கோரிய இந்த குறைநிரப்பு பிரேரணையை வாபஸ் பெற்றுள்ளது.

இதேவேளை நாடாளுமன்றத்தை மீண்டும் மார்ச் 3ம் திகதி கூட்டும் தீர்மானத்தை சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்மொழிந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments