சம்பந்தன் போட்டி: பெண்களிற்கும் முன்னுரிமை?


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார். இன்றுவரை அந்த முடிவில் மாற்றமில்லை.
இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன்.
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு சுமந்திரன் கருத்து தெரிவித்தார்.
இதன்போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரா.சம்பந்தன் அவர்கள் போட்டியிடுவாரா அல்லது தேசியப்பட்டியல் ஊடாக பிரதிநிதித்துவம் செய்யப்படுவாரா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய சுமந்திரன், இன்றைய நிலை வரைக்கும் அவர் தேர்தலில் போட்டியிடுகின்ற சூழலே காணப்படுகின்றது என தெரிவித்தார்.
அத்துடன், இத்தேர்தலில் பெண்கள், புது முகங்களிற்கு அதிகம் முன்னுரிமை வழங்கப்படுமா என அவரிடம் வினவியபோது, இம்முறை தேர்தலில் படித்த இளம் முகங்களிற்கான சந்தர்ப்பங்களை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டடுள்ளது, எனினும் தீர்மானம் முழுமையாக எடுக்கப்படவில்லை என்றார்.
பெண் உறுப்பினர்களை மாவட்டத்திற்கு ஒருவரையாவது வெற்றிபெற வைக்க வேண்டும் என்பது கடந்த தேர்தல்களில் நாம் எடுத்த முயற்சியாகும். இம்முறையும் அவ்வாறான நிலையே காணப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.

No comments