கிளியில் சிக்கியது மலைக்க வைக்கும் கஞ்சா தொகுதி

கிளிநொச்சி - வலைப்பாடு பகுதியில் இன்று (29) அதிகாலை 323 கிலோ பெறுமதியான 117 கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து வலைப்பாடு பகுதியில் சோதனை நடவடிக்கையை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது நள்ளிரவு 12.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது வாகன சாரதி கைது செய்யப்பட்டார்.

கைதானவர் வவுனியா- மரதன்குளம் பகுதியை சேர்ந்த 47 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments