பூநகரியில் ஒருவர் பலி!

பூநகரி சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் இன்று (29) இரவு சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று காரில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
புங்குடுதீவை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments