இலங்கையர்கள் 27 பேர் பங்களாதேஷில் கைது?

பங்களாதேஷ் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 27 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, பங்களாதேஷ் பாதுகாப்பு பிரிவினரால் மீனவர்களின் 4 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹிக்கடுவ, பெரேலிய உள்ளிட்ட சில பகுதிகளிலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments