கோர விபத்தில் நால்வர் பலி

கண்டி - திகன, மெனிக்ஹின்ன பகுதியில் இன்று (08) அதிகாலை 1.35 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கெப் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கொங்கிரீட் குவியல் ஒன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை, உஹன மற்றும் மகியங்கனை பிரதேசங்களை சேர்ந்த 17 முதல் 19 வயதுக்கு இடைப்பட்டவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

No comments