கோர விபத்தில் தந்தை - மகன் பலி

ஹபரன - பொலன்னறுவை பிரதான வீதியின் 31 வது மைல்கல் பகுதியில் இன்று (23) மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றது.

இந்த விபத்தில்,  காந்தி திஸாநாயக்க (வயது-56) மற்றும் அவரது 25 வயதுடைய மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments