அகப்பட்டது ஜதேக பிரபலங்களது அந்தரங்கங்கள்!


என்னையும் கைது செய்யுங்கள் என  புதிய அரசாங்கத்திடம் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் பொலிஸாரிடம் சிக்கிய காணொளிக் காட்சிகள் பெரும் சர்ச்கைகளை தோற்றுவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தியோகப்பூர்வ வீட்டை சோதனையிட்ட போது பொலிஸார் பல ஆபாச காணொளிகளை கைப்பற்றியுள்ளனர்.

இது இணையத்தளத்தில் சர்ச்சைக்குரிய காணொளிகளை வெளியிட்டு வந்த சர்மி குமார் என்ற பெண் வழங்கியதாக கூறப்படும் சில காணொளிகள் என குறிப்பிடப்படுகின்றது.

இதனால் பல்வேறு துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலர் கடும் பீதியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்மி குமார் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது, தான்; நடத்திய அழகு நிலையத்திற்கு வந்து சென்ற பிரபல அரசியல்வாதிகள், பாதுகாப்பு தரப்பின் பிரதானிகள், வர்த்தகர்கள், அரச உயர் அதிகாரிகள் மட்டுமல்லாது பிரபல ஊடகவியலாளர்கள் அழகிய பெண்களுடன் காணப்படும் காணொளிகளை இந்த பெண்ணுக்கு நெருக்கமான ஒருவர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் வழங்கியுள்ளார்.

இவ்வாறு வழங்கப்பட்ட சில காணொளிகளை நேற்று ரஞ்சனின் வீட்டில் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

விபச்சார தொழில் நிலையத்தை நடத்தியமை மற்றும் அந்த தொழிலில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டில் சர்மி குமாரை வலானை மோசடி தடுப்பு பிரிவு பொலிஸார் அண்மையில் கைது செய்தனர்.

வத்தளை பிரதேசத்தில் அழகு நிலையம் என்ற பெயரில் விபச்சார தொழில் நிலையத்தை நடத்தி வந்துள்ளதுடன் அங்கு இளம் பெண்கள் ஒரு மணி நேரத்திற்கு 30 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

No comments