சுற்றிவளைத்த பெருமளவு இராணுவம்

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை, பகுதியில் இன்று (23) மதியம் பெருமளவு இராணுவத்தினா் குவிக்கப்பட்டு வீடு ஒன்று திடீா் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
அண்மையில் நாகா்கோவில் பகுதியில் இராணுவ வீரர் மீது தாக்குதல் நடாத்தியதாக தேடப்படும் முக்கிய நபர் உள்ளிட்ட 6 போ் தங்கியிருப்பதாக இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி குறித்த வீட்டினை நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இணைந்து சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டனர்.
இதன்போது இளைஞன் ஒருவரை இராணுவம் கைது செய்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

No comments