உடுவிலில் நடந்த சுற்றிவளைப்பு?

யாழ்ப்பாணம் – மானிப்பாய், உடுவில் பகுதியில் அதிகாலை இராணுவம், பொலிஸ் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கை ஒன்று மேற்க்கொள்ளப்பட்டது.
இராணுவ வாகனங்களில் கொண்டு வந்து குவிக்கப்பட்ட இராணுவத்தினர் வீடு வீடாக சோதனை நடவடிக்கையை மேற்க்கொண்டனர்.
“தேடப்படும் நபர்கள் யாராவது உள்ளனரா” என்று தேடிவருவதாக வீட்டு உரிமையாளர்கள் சிலரிடம் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி வீதியால் சென்றவர்களும் சோதனை செய்யப்பட்டே தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இராணுவத்தினரின் திடீர் சோதனை நடவடிக்கையால் மக்கள் அச்சத்துடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments