ரிப்கானுக்கு மறியல்?

இன்று (23) காலை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரனும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான ரிப்கான் பதியுதீனை 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் – தலைமன்னார் பகுதியில் 240 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 ஏக்கர் காணியை போலி உறுதிப்பத்திரங்களை தயார் செய்து கையக்கப்படுத்திக் கொண்ட குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments