மக்களோ வீதியில்:சம்பந்தன் சொத்து வெளியீடு!


நல்லாட்சி அரசாங்கத்தில் தனக்கு வழங்கப்பட்ட சலுகைகள் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோரின் சொந்த விருப்பத்தின் பெயரில் வழங்கப்பட்டதாகவும் தான் அதை கேட்கவில்லை என்றும் சம்பந்தன்  சொல்லி இருக்கிறார்.

உண்மையில் நல்லாட்சி அரசாங்கம் எண்ணற்ற சலுகைகளை சுமந்திரன் மற்றும் சம்பந்தனுக்கு வழங்கி வந்தது. இந்த வகையில் சம்பந்தனுக்கு விசேட சலுகைகளை வழங்குவதற்கான விசேட அமைச்சரவை பத்திரத்தை முன்னாள் காணி மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக்க 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் திகதி சமர்ப்பித்திருந்தார்.

இதற்கமைய கொழும்பு 7, மாகமசேகர மாவத்தையில் அமைந்துள்ள பி-12 என்ற எதிர்கட்சித் தலைவருக்குரிய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை முன்னாள் எதிர்கட்சித் தலைவரான சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக நீடிக்கும் வரை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது/ இருக்கிறது.

அது மாத்திரமன்றி ஒன்றரை ஏக்கர் விஸ்தீரனமான காணியில் அமைந்துள்ள இந்த வாசஸ்தளத்தை பராமரிப்பதற்காக பராமரிப்பாளர் ஒருவர், பூங்கா பராமரிப்பாளர்கள் இருவர், உள்ளக பராமரிப்பாளர்கள் இருவர் அடங்கலாக ஐந்து பணியாளர்களும், அவர்களுக்கான சம்பளக் கொடுப்பனவும் மற்றம் வாசஸ்தலத்தை பராமரிப்பதற்கான செலவீனங்களை காணி மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

அதில் நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக சம்பந்தன் வழங்கும் மகத்தான பங்களிப்பிற்காக அவருக்கு இதுபோன்ற வசதிகளை செய்துகொடுப்பது அரசாங்கத்தின் கடமையும், பொறுப்புமாகும் என்றும் கயந்த தனது அமைச்சரவை பாத்திரத்தில் சுட்டி காட்டி இருந்தார்

இது தவிர KX-2330 , KO -6339 இலக்கமுடைய இரண்டு வாகனங்கள் மற்றும் 600 லீட்டர் பெற்றோல் ஆகியனவும் வழங்கப்பட்டு இருக்கிறது .

CAT 1094 இலக்கமுடைய பென்ஸ் கார் ஒன்றும் வழங்கப்பட்டு இருந்ததாகவும் சம்பந்தன் ஒப்பு கொள்ளுகிறார் .இந்த பென்ஸ் கார் திருப்ப கொடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லுகிறார்

No comments