புலிகளின் ஆயுதத்தை தேடிய இராணுவத்துக்கு அதிர்ச்சி

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இன்றைய தினம் (23) ஆயுதங்களை தேடி பொலிஸாரால் அகழ்வு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தில் விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்துக்கு பின்புறமாக இந்த அகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரமாக அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதிலும் எந்த பொருட்களும் மீட்கப்படவில்லை.

No comments